மூலம்
இயற்கை
மூலப்பொருட்கள்:
புளி-10கிராம்,துத்திவிதை-5கிராம்,வெந்தயம்-10கிராம்,கசகசா-5கிராம்,நாட்டுவாழைப் பழம்-50கிராம்.
உபயோகிக்கும்
விதம்:
துத்தி,வெந்தயம்,கசகசா ஒன்றாக அரைத்து புளி,நாட்டு வாழைப்பழம் சேர்த்து பிசைந்து தினமும்
இரவு 30கிராம் அளவிற்கு
சாப்பிடவும்.குறைந்தது 7 நாட்கள்
சாப்பிடவும்.
முடி வளர
இயற்கை
மூலப்பொருட்கள்:
சணல்-50கிராம்,வெட்டிவேர்-50கிராம்,ஆவாரம்பூ-50கிராம்,கருவேப்பிலை-50கிராம்,நல்லெண்ணெய்-1லிட்டர்.
உபயோகிக்கும்
விதம்:
இதில் உள்ள
அனைத்து பொருட்களையும் 1லிட்டர்
நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சவும்,தினமும் தலைக்கு தேய்க்கும் எண்ணெய் போல் பயன்படுத்தவும்.இவ்மருந்தை
பயன்படுத்தினால் முடி கொட்டது,முடி அடர்த்தியாக
இருக்கும்,கண்பார்வை
அதிகரிக்கும்.
இயற்கை
மூலப்பொருட்கள்:
ஆட்டுப்பால்-200மில்லி,உசிலை-20கிராம்,சீயக்காய்-20கிராம்.
உபயோகிக்கும்விதம்:
இதில்உள்ளஅனைத்துபொருட்களைநன்றாகஇடித்து
20கிராம்அளவிற்குஎடுத்து,ஆட்டுப்பால் 200மில்லிஅதில்கலந்துதலையில்நன்றாகதேய்த்து,பின்தலையைஅலசவும்.இவ்மருந்தைபயன்படுத்தினால்முடிபளபளப்பாகஇருக்கும்,உறுதியாகஇருக்கும்,கண்ணுக்குகுளிர்ச்சியாகயும்,முகம்அழகானதோற்றத்துடன்இருக்கும்.
கண்பார்வை
அதிகரிக்க
இயற்கை
மூலப்பொருட்கள்:
கோவை இலை-5கிராம்,சின்னவெங்காயம்-10கிராம்,சீரகம்-1கிராம்.
உபயோகிக்கும்
விதம்:
இவைகளை ஒன்றாக
அரைத்து,சீரகத்தை ஊர
வைத்து ஒரு வெள்ளை துணியில் எடுத்து கண்ணீல் 3சொட்டு விடவும். சொட்டு விட்டவுடன் கண்களை
முடிக்கொண்டு நன்றாக உருட்டவும்.மாதம் 1 முறை தான் செய்ய வேண்டும்,காலை எழுந்தவுடன்
6 முதல் 8 மணி வரை சூரியனை பார்க்க வேண்டும்.
மூக்கில் நீர்
வடிதலுக்கு
இயற்கை
மூலப்பொருட்கள்:
மிளகு-5,கேழ்வரகு-50கிராம்.
உபயோகிக்கும்
விதம்:
மிளகை நாக்கில்
கீழே ஒதுக்கி கொள்ளவும்.காலையில் இருந்து மாலை வரை அதை வாயில் ஒதுக்கவும்.கேழ்வரகு
அரைத்து 100மில்லி தண்ணீர்
கலந்து சூடாக்கி நெற்றில் பற்று போடவும்.
இரத்தக் கட்டு
நீங்க
இயற்கை
மூலப்பொருட்கள்:
சுண்ணாம்பு-10கிராம்,சித்தரத்தை-10கிராம்,தேன்.
உபயோகிக்கும்
விதம்:
சித்தரத்தை
நன்றாக பொடி செய்து சுண்ணாம்புடன் கலந்து வீக்கம் உள்ள இடத்தில் தடவவும்.அதன்பின் 2நிமிடம் கழித்து அந்த இடத்தில் சொட்டு,சொட்டாக தேன் விட்டு தடவவும்.3நாட்கள் செய்யவும்.
சத்து குறைவான ஆண்களுக்கு
இயற்கை
மூலப்பொருட்கள்:
நெல்லிக்காய் - 1கிலோ, கருப்பட்டி-1கிலோ.
உபயோகிக்கும்
விதம்:
இவைகளை புதிய
மண்பானையில் ஊர வைத்து அந்த மண்பானையை மண்ணுக்குள் பதித்து பானையின் வாய் பகுதியை
துணி வைத்து காற்று,பூச்சிப்
புகாதவாறு நன்றாக இறுக்கி, கட்டி விட வேண்டும்.இது வெயில் படும்படி 45நாட்கள் வைக்கவும்,பின் அந்த விதைகளை எடுத்து போட வேண்டும்,அதிலிருந்து காலை,மாலை சாப்பிடவும்.இதை போல் 3 மாதங்கள் சாப்பிடவும்.
நோய் எதிப்பு
சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்!
பாகற்காயை
சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு
போன்றவற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும்.
இரண்டு
தேக்கரண்டி பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு
மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும்.
இரத்த கொதிப்பு
இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு
தீர்வு கிடைக்கும். ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி,
பேதியை போக்க இரண்டு
தேக்கரண்டி பாகற்காய் இலையின் சாறு, இரண்டு தேக்கரண்டி டீத்தூள், வெங்காயச்சாறு
இரண்டு தேக்கரண்டி, எலுமிச்ச சாறு
இரண்டு தேக்கரண்டி சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்
காலராவினால் ஏற்பட்ட வாந்தி, பேதி குணமாகும்.
பழுத்த பாகற்காய்
இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது
ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை
ஜீஸ் செய்து சாப்பிட்டால்
ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை
அதிகரிக்கிறது.
தொடர்ந்து
பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன்
அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும். பாகற்காயில்
அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும்
சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும். பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண்
பார்வை பலப்படும்.
பாகற்காற்
பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு
சிறந்ததாகும். இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை
சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கைகளில் ஏற்படும்
அரிப்பு, கால்களில்
ஏற்படும் தோல் தடிப்பு, சொரியாஸிஸ் போன்ற
நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிடவேண்டும். பாகற்காய் நச்சுத்
தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சுவாச கோளாறு
மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ
சாப்பிட சுவாச கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.
No comments:
Post a Comment