Wikipedia

Search results

Monday, January 17, 2011

பொங்கல் பண்டிகை: ஏன்? எதற்கு?

"பொங்கல் பண்டிகைஎன்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும்அந்த அளவுக்குஅனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள்இது தொடர்ச்சியாக நான்குநாட்கள்நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றதுஎனினும் கிராமங்களில்தான் இந்தப்பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம்.

போகி பண்டிகை
"போகி'யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள்இந்திரனுக்கு "போகிஎன்றொரு பெயர் உண்டுஎனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும்மழை பொழிய வைக்கும் கடவுள்வருணன்அவனுக்கு அரசனாகத்திகழ்ந்து இயக்குபவன் இந்திரன்வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்உயிர்கள் வாழும்எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியானஇந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்ததுதற்போது, "பழையன கழிதலும்புதியன புகுதலும்என்றவகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள்அப்போது தேவையற்ற பழம் பொருட்களைஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள்போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம்.அப்போது குழந்தைகள்சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.
ஆனால் இப்போதெல்லாம் போகியன்று "டயர்'களைக் கொளுத்தும் மூடத்தனம்பரவலாக நடக்கின்றதுஇதனால் வளிமண்டலம் மாசு படுவதோடுமனிதர்களுக்கு நோயும் உண்டாகின்றனஏற்கெனவே சுவாசக் கோளாறு உள்ளவர்கள்,டயர்கள் வெளியிடும் நச்சுப் புகையால் மேலும் பாதிப்புக்குள்ளாவார்கள்என்னதான் காவல் துறையினர்எச்சரித்தாலும்வீட்டுக்கு ஒரு காவலரையா நிறுத்த முடியும்எனவே நாமே சமுதாயக் கட்டுப்பாடோடும்அறிவியல்விழிப்புணர்வோடும் இருந்துநோய்கள் தரும் டயர் கொளுத்தும் வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

பொங்கல் பண்டிகை
ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபுஅவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றதுஅந்தப்புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டுஅதில் திருநீறும் குங்குமமும் இட்டு,அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.
பெரும்பாலும் கிராமப்புறங்களில்வாசலிலே வண்ணக் கோலமிட்டுஅதன் நடுவே பொங்கல் பானையை வைத்து,பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டிமணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, "பொங்கலோ பொங்கல்என்று கூறி மகிழ்வார்கள்இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால்சூரிய பகவான்அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார்இதற்காக கூடவே கரும்பும் வைத்துகடவுளுக்குப் படைப்பார்கள்.
நகரங்களில் உள்ளோர்சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள்சந்துபொந்துகளில்கூட வாகனநெரிசல் வளைத்துக் கட்டும்போதுசமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம்ஆயினும் "பால்கனி'யிலிருந்தோ,மொட்டை மாடியிலிருந்தோ அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள்தூபம்தீபம் காட்டி ஆதவனைஆராதனம் செய்வார்கள்இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம்முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
கிராமங்களில் தீபாவளிக்கு புத்தாடை வாங்காது போயினும்பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையேஅணிவார்கள்நகரங்களில் ஏனோ தீபாவளியின் இடத்தை பொங்கல் பண்டிகை பிடிக்கவில்லை என்றுதான்தோன்றுகிறதுஅது சரி, "மாடுகளை மேய்க்க மந்தைவெளி இங்கு இல்லையேஎன்ற பாடல் வரிகள் கூறுவதும்நியாயம்தானே?
எது எப்படியோ... பொங்கல் பண்டிகை தரும் மகிழ்ச்சிநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பொதுவானதே!

மாட்டுப் பொங்கல்
கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. "ஆயிரம் பசுவுடைய கோநாயகர்என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. "ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றதுஎன்றார்திருவள்ளுவர்அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளேஇதன் மூலம் மாடுகளே உலகைஉயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.
அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம்பசுவின் உடலில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர்எனவே பசுவை வணங்குவதன் மூலம்அனைத்துதேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.
மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசிதிருநீறிட்டுகுங்குமம் வைத்துமாலை போட்டு வணங்குவர்அதன்பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.
காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசிகாலில் சலங்கை கட்டி, "வீர நடைநடக்க வைப்பர்பல வீடுகளில் அன்றுகாளை மாடுகளுக்கு "அங்க வஸ்திரம்போர்த்திமரியாதை செய்வார்கள்ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின்நாயகர்களும் காளைகளேஆனால் அக்காளைகளுக்கு செயற்கையான முறைகளில் வெறியூட்டுவது தவறுதக்கமருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்றுஅதன் வீரத்தை வளர்ப்பதே விவேகமான செயலாகும்.

திருவள்ளுவர் தினம்
மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றதுநாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர்திருவள்ளுவர்கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகைகாதலுடன் அவ்வரிய நூலைநிறைவு செய்கின்றார்.
திருக்குறளில் சொல்லப்படாத விஷயமே இல்லை.
"உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லைஎன்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர்திருவள்ளுவர்நீதிநேர்மைஉண்மைதுறவுஅரச நீதிகாதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லைதிருவள்ளுவர்தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதிஇளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின்பொருட்களை உணர்வித்தலே உண்மையான "வள்ளுவ பூஜை'யாகும்இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம்பின்பற்ற வேண்டும்.

காணும்பொங்கல்
பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது "கனுபொங்கல்அன்று காலை நீராடிவெறும் வயிற்றுடன்,வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டுஅதில் பொங்கல்கரும்பு போன்றவற்றை வைத்துஆதவனுக்குஅர்ப்பணிப்பார்கள்.
"காணும் பொங்கலும்இந்த நன்னாளேஅன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும்நண்பர்களையும் பார்த்து அளாவிமகிழ்வது வழக்கம்சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர்ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமேசொந்தமும்நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடிருந்ததுஇன்றைய "சீரியல்உலகில்வீட்டுக்கு வரும்சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பதுகூட அரிதாகிவிட்டதுஇந்த அவல நிலையை மாற்ற இந்தக் காணும் பொங்கல்நாளில் சபதமேற்போம்!
வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்ஜாதிமதஇனமொழி வேறுபாடுகள், "சூரியனைகண்டபனிபோல விலகட்டும்அதற்கு அந்த ஆதவனே நல்வழி காட்டட்டும்வாழிய செந்தமிழ்வாழ்க நற்றமிழர்வாழியபாரத மணித் திருநாடு!

1 comment:

  1. தைத் திருநாள் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete